Andhra
Andhra timepass
Lifestyle

Pongal விருந்து: மருமகனுக்கு 379 வகையான உணவுகளைப் பரிமாறிய மாமியார்! | Andhra

டைம்பாஸ் அட்மின்

ஆந்திர பிரதேச மாநிலத்தில் பொங்கல் தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு பிரமாண்டமாக விருந்து வைத்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.

இப்படி போட்டி போட்டுக்கொண்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைப்பது அம்மாநிலத்தின் பல்வேறு பகுதி மக்களும் பெருமையாக கருதுகிறார்கள்.

இந்நிலையில், எலுரு நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் பீமாராவ் தனது மகள் குஷ்மாவை விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியை சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த ஆண்டு முரளிதருக்கு தலை பொங்கல் என்பதால், முரளிதரையும், மகள் குஷ்மாவையும் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார்.

அவர்களுக்கு தடபுடலாக வைக்கப்பட்ட விருந்தில், 379 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. அந்த உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார். 379 வகையான உணவுகளில் 10 சதவீதத்தை கூட அவர் சாப்பிடவில்லை என்றாலும், இந்த பிரமாண்ட விருந்து ஆந்திராவில் வைரலாகியுள்ளது.

கடந்த ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார்.