Chennai : 'இங்கருந்த பூங்காவ காணோ சார்' - பரபரப்பை கிளப்பிய பேனர் !

"இங்கிருந்த கேசவன் பூங்கா காணவில்லை கண்டுபிடித்து தருபவருக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Chennai
Chennai timepass
Published on

ஒரு படத்தில் கிணறு காணவில்லை என்று காவலரிடம் வடிவேலு புகார் தருவது போல, இங்கு ஒருவர் பூங்காவைக் காணவில்லை என்று பேனர் அடித்து வைத்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கேசவன் பூங்காவை சில ஆண்டுகளாகவே காணவில்லையாம். 

பூங்கா இருந்த இடத்திற்கு அருகில் பேனர் அடித்து பூங்காவைக் கண்டுபிடித்து தருபவருக்கு சன்மானம் என தொண்டர் இயக்க மாநில தலைவர் அறிவித்துள்ளார். இந்தப் பேனரில், "இங்கிருந்த கேசவன் பூங்கா காணவில்லை கண்டுபிடித்து தருபவருக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கேசவன் பூங்கா இருந்த இடத்தை ஆக்கிரமித்து தனிநபர் ஒருவர் கட்டிடம் கட்டியிருப்பதை சுட்டிக் காட்டவே இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளதாக தொண்டர் இயக்க மாநில தலைவர் தொண்டன் சுப்பிரமணி கூறியுள்ளார்.

காணவில்லை காணவில்லை என்று காவலரிடம் புகார் அளிப்பதை தான் பார்த்திருப்போம். ஆனால், இந்த முறை கொஞ்சம் புதிதாக வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

Chennai
'எங்களுக்கு வீடு வேணும்' - ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த ஆடுகள் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com