பழமொழி நஹி.. புதுமொழி போலோ..

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே ஏன் வளையணும்?, அற்பனுக்கு வாழ்வு வந்தால் அதிகாலையில் சரக்கு அடிப்பான்.
பழமொழி நஹி.. புதுமொழி போலோ..
Published on

எல்லாத்தையும் ரீமேக், ரீமிக்ஸ் வந்துடுச்சு. இன்னும் எத்தனை நாள் பழைய பழமொழிகளை சொல்லி போரடிக்கிறது. அதான் பழமொழிகள் அப்படியே உல்டா பண்ணி புதிய மொழியை உருவாக்கியிருக்கிறோம். இதையெல்லாம் அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.

  • அடி மேல் அடி வைத்தால் மிதி கிடைக்கும்.

  • கூழானாலும் சூடு பண்ணி குடி.

  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் வடு.

  • ஆள் இல்லாத ஊரிலே இலுப்பைப் பூ சர்க்கரையும் என்னாத்துக்கு?

  • அகத்தின் அழகு நகத்திலும் தெரியும்.

  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே ஏன் வளையணும்?

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அதிகாலையில் சரக்கு அடிப்பான்.

  • ஆசை, வெட்கம், மானம் சூடு சொரணை அறியாது.

  • வாயு உள்ள பிள்ளைக்கு உப்புசம்.

  • ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தெருவில் அலையும்.

  • யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு அரை காலம் போதும்.

  • மின்னுவதெல்லாம் ஸ்டார் அல்ல.

  • இக்கரைக்கு அக்கரை நல்லது.

  • உப்பைத் தின்றவன் துப்பிவிடுவான்.

  • தை பிறந்தால் லீவு கிடைக்கும்.

  • நண்டு கொழுத்தால் நல்லா தின்னலாம்.

  • வரவு எட்டணா எப்பவும் செல்லாது.

  • கண் கெட்ட பின் சங்கர நேத்ராலயா.

  • தல இருக்க தளபதி ஆடலாமா?

  • பல நாள் திருடன் ஒரு நாள் தாதா ஆவான்.

  • புலி பதுங்குவது பயத்தினாலும் இருக்கலாம்.

  • மடியில் கனம் இருந்தால் வயிற்று உபாதைகள் வரும்.

  • வெண்ணையை வைத்துக்கொண்டு தயிரை விற்று விடு.

  • விரலுக்குத் தகுந்த மோதிரம்.

    - ஆர்.சரண்.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com