குமரி : 'பெட்டிக்கடையை காணோம்' - வடிவேலு காமெடி பாணியில் பெண் புகார் !

நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சி ஒன்றில் 'கிணற்றை' காணோம் என போலீசில் புகார் கொடுக்கும் காட்சி பிரபலமானது. இதைபோல், 'பெட்டிக் கடையை காணோம்' என ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார்.
குமரி
குமரிகுமரி

நடிகர் வடிவேலுவின் நகைசுவை பாணியில் 'பெட்டிக்கடையை காணோம்' என ஒரு பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது.

நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சி ஒன்றில் 'கிணற்றை' காணோம் என போலீசில் புகார் கொடுக்கும் காட்சி பிரபலமானது. இந்த காட்சியை போல், 'பெட்டிக் கடையை காணோம்' என காவல்நிலையத்தில் ஒரு பெண் கொடுத்த புகார் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சதோப்பு பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 55). இவர் அதே பகுதியில் இரும்பாலான பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

மறுநாள் காலையில் வந்து பார்த்த போது பெட்டிக்கடையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேறு இடத்துக்கு தான் வந்து விட்டோமோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சற்று நேரம் யோசித்த பிறகு, நம்முடைய கடை இருந்த இடத்தில் தான் நிற்கிறோம் என முடிவு செய்துள்ளார்.

பின்னர் பதற்றத்துடன் நேரடியாக கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அதில், பெட்டிக்கடையை அலேக்காக திருடர்கள் தூக்கி சென்று விட்டனர். அதில் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் இருந்தது என தெரிவித்துள்ளார்.

போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் காட்சி பதிவாகி உள்ளதா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.

குமரி
கோவில்பட்டி : பெண்களிடம் நகை பறித்து சினிமா படம் எடுத்த நடிகர் குடும்பத்துடன் சிக்கினார் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com