'ஆங்ரி பேர்டொன்று கண்டேன்' - பேஸ்புக் பாரதி, ட்விட்டர் வள்ளுவர்

“ஆங்ரி பேர்டொன்று கண்டேன் அதை ஆங்கோர் ஆண்ட்ராய்டு போனில் வைத்தேன் எரிந்து தீர்ந்தது பேட்டரி - தீர்வதில் ஆண்ட்ராய்டென்றும் ஐ போனென்றும் உண்டோ’’
ட்விட்டர் வள்ளுவர்
ட்விட்டர் வள்ளுவர்பேஸ்புக் பாரதி
Published on

உலகத்துக்கு ரெண்டே வரியில், பல கருத்துகளை அப்பவே சொன்னவர்ங்குற வகையில் வள்ளுவர்தாங்க ஆதி ட்விட்டர். இப்போ அவர் இருந்திருந்தார்னா, ‘வலைபாயுதே புகழ்’ வள்ளுவர்னு பெயர் வாங்கியிருப்பார். இப்போ நம் பழந்தமிழ்ப்புலவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் காலத்தில் இருந்தா...

280 எழுத்துகளுக்குள் கருத்துக் கபடி ஆடுற காட்டுப் பயக் கூட்டத்துக்குள்ளே வள்ளுவரும் இருந்து, ரீட்வீட்டைப் பத்தி ட்வீட் பண்ணியிருந்தார்னா...

‘இடும் பொழுதின் பெரிதுவக்கும் தன் ட்வீட் ஆர்ட்டி எனக்கேட்டல்’

இது ‘ஸ்மார்ட் போன்’ காலம் தலைவா. அக்கினிக் குஞ்சை ஆங்ரி பேர்டா மாத்து. அய்யே, ஆங்ரி பேர்டை மரப்பொந்துக்குள்ளேயா வைப்பாங்க? ஆண்ட்ராய்டுலதானே வைக்கணும். ரீமேக் பண்ணி பாரதியார் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்டால், லைக்கும் ஷேரும் பிச்சுக்கும்ல...

“ஆங்ரி பேர்டொன்று கண்டேன் அதை ஆங்கோர் ஆண்ட்ராய்டு போனில் வைத்தேன் எரிந்து தீர்ந்தது பேட்டரி - தீர்வதில் ஆண்ட்ராய்டென்றும் ஐ போனென்றும் உண்டோ தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்’’

தப்பித்தவறி ஏதாச்சும் ஒரு மிஸ்டு கால்ல, நம்ம பசங்ககிட்ட நம்பர் சிக்குச்சுனா, ட்ரூ காலர்ல பெயர் கண்டுபிடிச்சு, வாட்ஸ் அப்ல போட்டோ ஷேர் பண்ணி, சாட்டிங், டேட்டிங்னு போய்ட்டு இருக்கிற காலத்துல, இன்னும் என்னங்க, யாயும் ஞாயும் யாராகியரோ? செம்புலப் பெயல்நீராருக்கும் வைப்போம்ல செக்.

“யாயும் ஞாயும் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் எந்தையும் நுந்தையும் ட்விட்டர் ஃபாலோயர்ஸ் உன் ஐ.டியும் என் ஐ.டியும் எவ்வழி அறிதும் ஆன்லைனில் பச்சை விளக்கெரிய அன்புடை நெஞ்சம்தாங் கலந்தனவே”

இந்தக் கட்டுரையை நான் என்னோட ‘ஃபேக் ஐ.டிலதான் எழுதி இருக்கேன். ஏன்னா, ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ சொன்ன அதே கணியன் பூங்குன்றனார்தான், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ன்னும் சொல்லி இருக்கார்!

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com