'குளிர்பானத்துக்கு கோர்ட் போனாங்களா?' : விநோத வழக்குகள் - 1

நம்மை நாமே ரிலாக்ஸ் செய்து கொள்ள வினோதமான ஒரு வழக்கை பாப்போம்.
'குளிர்பானத்துக்கு கோர்ட் போனாங்களா?' : விநோத வழக்குகள் - 1

அவதூறு வழக்குகள், சொத்து குவிப்பு வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், முன்ஜாமீன், தப்பி ஓட்டம், சரண்டர் என்று பேப்பரை திறந்தால் கோர்ட் கேஸ் என்று கண்ணில் பிடிபடாத நாளே கிடையாது. நம்மை நாமே ரிலாக்ஸ் செய்து கொள்ள சில வினோதமான ஒரு வழக்கை பாப்போம்.

டோலக்பூரைச் சேர்ந்த ஒருவர் பாட்டிலில் விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார். அப்போது பாட்டில் தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது. கடைக்காரர் பாட்டிலுக்கு காசு கேட்க குளிர்பானம் வாங்கி குடித்தவர் கொடுக்க மறுக்க இருவருக்குமிடையில் கலாட்டாவாக போலீஸ் வரை போய் பிரச்சனை கோர்ட்டுக்கு வந்து விட்டது.

கடைக்காரர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், "ஹோட்டலில் காசு கொடுத்து தான் சாப்பிடுகிறோம். அதற்காக அங்கு உணவு பரிமாறும் தட்டி கிண்ணம் தண்ணீர் தம்ளர் என எல்லாவற்றையும் நாம் கொண்டுவந்துவிட முடியுமா? அது போலத்தான் குளிர்பானம் வாங்கினால் பாட்டிலை கொண்டு போக முடியாது" என்று வாதிட்டிருக்கிறார்.

எதிர்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா அவரும் அசராமல் திருப்பி அடித்தார். "ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்குட் (அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருள்) அல்ல. அதனால் தட்டு தம்ளருக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது.

ஆனால், குளிர்பானம் என்பது பேக்குட் ஐட்டம். இது போன்ற பேக்குட் ஐட்டங்கள் விற்பனைக்கு வரும்போது பேக்கிங்குக்கும் சேர்த்துதான் விலை வைக்கப்படுகிறது. குளிர்பானம் வாங்கும் போதும் சேர்த்து தான் நாம் விலை கொடுக்கிறோம்.

எனவே குளிர்பானம் வாங்குபவருக்கு தான் பாட்டில் சொந்தம். மெடிக்கல் ஷாப்பில் இருந்து ஒயின்ஷாப்பில் வாங்கப்படும் பொருட்கள் பாட்டிலோடுதான் தரப்படுகின்றன" என்று வாதிட்டார்.

ஏறத்தாழ ஆறு மாதங்கள் இழுத்தடித்து இந்த வழக்கில் குளிர்பானம் வாங்குபவருக்கு தான் பாட்டில் சொந்தம் என்று தீர்ப்பானது. ஒருவழியா முடிஞ்சதுப்பா..

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com