Jayalalitha : அம்மா வா? அன்னபூரணி யா? - அதிமுகவின் புது விளம்பரம் !

திண்டிவனம் நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள சிறு பாலங்களில், "அன்னபூரணியே! மகராசியே!" என்றெல்லாம் வாசகங்களை எழுதியுள்ளனர்.
Jayalalitha
Jayalalitha டைம்பாஸ்
Published on

திருவண்ணாமலை, திடீர் சாமியார்கள் உருவாகும் இடமாகவும், அடைக்கலம் தேடும் இடமாகவும் மாறிவிட்டது. செங்கல்பட்டு பகுதியில் பிரபலமாகிப்போன அன்னபூரணி அரசு அம்மா.

தற்போது திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பகுதியில் ஆசிரம குடில் ஒன்றை அமைத்து அங்கேயே அமர்ந்துவிட்டார். இந்நிலையில், கீழ்பென்னாத்தூர் பகுதி அ.தி.மு.க-வினர் ஜெ. பிறந்தநாளையொட்டி சுவர் விளம்பரங்களை வரைந்துள்ளனர்.

திருவண்ணாமலை - திண்டிவனம் நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள சிறு பாலங்களில், "அன்னபூரணியே; மகராசியே!" என்றெல்லாம் வாசகங்களை எழுதியுள்ளனர்.

இந்த விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ள இடத்திற்கு சுமார் 3 கி.மீ தொலைவில் தான் அன்னபூரணி அரசு அம்மாவின் ஆசிரமமே அமைந்திருக்கிறது. இலைக்கட்சிக்காரங்க புகழ்ந்திருப்பது எந்த அம்மாவோ..!

- கண்ணதாசன்.

Jayalalitha
'அம்மா மறைந்த நன்னாளில்' - டைம்பாஸ் மீம்ஸ்
Timepass Online
timepassonline.vikatan.com