Engineers in Kumbh Mela: சாமியார்களான 10,000 பொறியியல் பட்டதாரிகள்

அரியர் வைத்துள்ள சாமியார்கள், என்னுடைய அரியரை முடித்துவிட்டு, கண்டினியூ செய்து கொள்கிறேன் என்று கேட்டால், "அனைத்தையும் துறந்த உமக்கு அரியர் பரிச்சை மட்டும் எதற்கு" என வைரமுத்து ஸ்டைலில் கேட்பார்களோ?
Engineers
Engineersடைம்பாஸ்

கும்பமேளா நிகழ்வில் பொறியாளர்கள், மேலாண்மை பட்டதாரிகள் என கிட்டத்தட்ட 10,000 பேர் நிர்வாண சாமியார்களாக மாறியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் 4 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கும்பமேளா நிகழ்ச்சியில் படித்த பொறியாளர்கள், மேலாண்மை பட்டதாரிகள் என கிட்டத்தட்ட 10,000 பேர் நாக சாதுக்களாக மாறுவதற்கு அவர்களின் இல்லற வாழ்க்கையை துறந்து, முடிகளை வெட்டி ஆடைகளை துறந்து நிர்வாணமாக உடலில் வெறும் சாம்பல்கள் மட்டுமே பூசி தெருக்களில் சுற்றித்திரிகின்றனர்.

Engineers
தொடர்: 90-ஸ் கிட்ஸ் கிரிக்கெட் - கிரிக்கெட் கார்ட் அலப்பறைகள்

என்னதான் கடன் வாங்கி பொறியாளர், மேலாண்மை பட்ட படிப்பு படித்து இருந்தாலும் இவர்கள் படித்த படிப்பு எல்லாம் இப்படி சாம்பலாக போய்விட்டது என்ற கவலை பெற்றோர்களுக்கு இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் தீட்சை பெற்று நாகா சாதுக்களாக மாறியதற்கு இவர்கள் பல காரணங்களை கூறினாலும் அந்த காரணங்களை எல்லாம் கடன் கொடுத்த வங்கிகளும், கந்துவட்டிக்காரங்களும் ஏற்பதில்லை.

"உலகில் எங்கள் பணி என்ன என்பதை நாக சாதுக்களான நாங்கள் அறிந்தோம். உலகையே துறக்க வேண்டும் என நினைத்தோம். அதனால் தான் அனைத்தையும் துறந்து நிர்வாண சாமியாரானோம்" என்று கூறுகிறார்கள். இந்த ஞானோதயம் இவர்களுக்கு படிப்பதற்கு முன்பே வந்திருந்தால் பணமும் படித்த படிப்பும் வீணாகி இருக்காது. இவர்களின் பெற்றோர்களுக்கும் சுமை இருந்திருக்காது.

ஒருவேளை நிர்வாண சாமியார்களில் அரியர் வைத்துள்ள சாமியார் இருந்தால் மூத்த சாமியார்களிடம் நான் போய் என்னுடைய அரியர் தேர்வை முடித்துவிட்டு, பிறகு வந்து நிர்வாண சாமியார் பதவியை கண்டினியூ செய்து கொள்கிறேன் என்று கேட்டால், "அனைத்தையும் துறந்த உமக்கு அரியர் பரிச்சை மட்டும் எதற்கு" என்று வைரமுத்து ஸ்டைலில் பஞ்ச் டயலாக் வருமோ எனவோ..

Engineers
தொடர்: பழைய பேப்பர் கடை - 'பாகிஸ்தான் பிரிவினையும் அப்பளத்தின் வரலாறும்'

சனாதன தர்மத்தை கடைப்பிடிக்கிறோம் என்பதற்காக சட்டையை இழந்து விட்டார்களாம். அனைத்தையும் துறந்தோம், அனைத்தையும் துறந்தோம் என்று சொல்லும் இவர்களால் ஏன் போதையை துறக்க முடியவில்லை என்று தெரியவில்லை.

கஞ்சா, அபின், குட்கா ஆகியவை அடங்கிய போதை பைப்பை வாயில் வைத்துக் கொண்டு போதையை இழுத்து புகையை தள்ளிக் கொண்டே இருப்பார்கள் இதற்கு பெயர்தான் அனைத்தையும் துறந்ததா? இதை பார்த்தால் நான் கடவுள் வேர்சன் 2 போல தெரிகிறது. நான் கடவுள் படத்தில் ஆர்யாவை பார்த்தாலே பயம் வரும், அதுபோலத்தான் இவர்களை பார்த்தாலும் பயம். பயத்தாலேயே காவல்துறையினரும், பொது மக்களும் இவர்களிடம் எந்த பிரச்சனைக்கும் செல்வதில்லை,

சாலையில் வந்தாலே பிறர் விலகி சென்று விடுவார்கள். ஆடையில்லாமல் அரைகுறையாக திரியும் இவர்களின் நடை, உடை, பாவனை, பேச்சு, செயல் என அனைத்துமே வேறுபட்டிருக்கும் அனைத்தையும் துறந்த இவர்கள் அனைத்திலும் வித்தியாசத்தை காட்டுவார்கள்.

அனைத்தையும் துறந்தவர்களில் போலி சாமியார்களும் இருக்கிறார்கள். புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்களிடம் போலி வார்த்தைகளை கூறி பணத்தையும் கொள்ளையடித்து விடுகிறார்கள். மக்களே உஷார். இனி நீங்கள் செல்லும் புனித தளங்களில் இது போன்ற போலி சாமியார்களிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

எல்லாம் அறிந்ததாக சொல்லிக் கொண்டு நிர்வாண சாமியாராக அனைத்தையும் துறந்து சோம்பேறியாக வாழ்ந்து வரும் இவர்களெல்லாம் கண்ணதாசனின் வரிகளை கேட்டதில்லைப்போல.

Engineers
தொடர்: நினைவே ஒரு சங்கீதம் - 'நெஞ்சம் மறப்பதில்லை பிரிந்த காதலின் தீராவலி'

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com